76. அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் கோயில்
மூலவர் பக்தவத்சலப் பெருமாள்
தாயார் சுதாவல்லி, என்னைப் பெற்ற தாயார்
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் வருண புஷ்கரணி
விமானம் ஸ்ரீநிவாச விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருநின்றவூர், தமிழ்நாடு
வழிகாட்டி சென்னையில் இருந்து திருநின்றவூர் செல்லும் பேருந்தில் சென்று இறங்கி அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் இரயில் பாதையில் திருநின்றவூர் இரயில் நிலையம் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவு.
தலச்சிறப்பு

Tirunindravur Gopuram Tirunindravur Moolavarஒருசமயம் திருமால் யோக நித்திரையில் ஆழ்ந்தபோது, மஹாலக்ஷ்மி இத்தலத்திற்கு வந்து தங்கினார். 'திரு'வாகிய லக்ஷ்மி எழுந்தருளியதால் இந்த ஸ்தலம் 'திருநின்றவூர்' என்ற பெயர் பெற்றது.

மூலவர் பக்தவத்ஸலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் சுதாவல்லி, என்னைப் பெற்ற தாயார் ஆகிய திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றார். வருணனுக்கு பகவான் பிரத்யக்ஷம்.

Tirunindravur Utsavarஇந்த ஸ்தலத்திலேயே திருமகள் தங்கியதால் அவளது தந்தையான சமுத்திரராசனும், அவனது துணைவியாரும் இங்கு வந்து 'என்னை பெற்ற மகளே' அழைத்ததால் இத்தலத்து தாயார் 'என்னைப் பெற்ற தாயார்' என்னும் சிறப்பு திருநாமம் பெற்றார்.

வராகப் பெருமாள் தோன்றியதால் வராஹ க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. அருகில் ஏரிகாத்த ராமர் கோயிலும், இருதயாலீஸ்வரர் சிவன் கோயிலும் உள்ளது.

திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com